வியாழன், 14 நவம்பர், 2013

குழந்தைகள் தின விழா




இன்று 14.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் சாட்சா நேரு என்றும் நேரு மாமா என்றும் அனைவராலும் போற்றப்படும் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினவிழா எனும் பெயரில் உலகம் முழுதும் கொண்டாடப்படும் இவ்விழாவின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதோடு, அவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாற்றையும், சுதந்திர இந்தியாவில் அவர் ஆற்றிய மக்கள் முன்னேற்ற பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி குழந்தைகள் பேச்சு, கவிதை, பாடல்கள் ஆகியவை மூலம் குழந்தைகள் தினம் பற்றிய கருத்துக்களை வழங்கினர்.  
அடுத்து விழாவில் சிறப்பு விருந்தினராகக் கிருஷ்ணகிரியில் இருந்து வந்து கலந்துக்கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (அறிவியல்). திருமதி அ. மரியரோஸ் அவர்கள் கட்டுரை, பேச்சு. ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி . நர்மதா நன்றி கூறினார்.





































புதன், 13 நவம்பர், 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

                  இன்று கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 
            முற்பகல் துவக்க விழாவில் மாவட்டத் துவக்கக் கல்வி அலுவலர் திரு த.துரைசாமி அவர்களும், பிற்பகலில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(அ.க.இ) திரு பொன்.குமார் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இடைப்பட்ட காலத்தில் அரசு நடுநிலை/உயர்/மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் நான்கு அரங்குகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை தனித்தனி குழுக்களாகச் சமர்பித்தனர். 
               இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஏழு ஆய்வுக் கட்டுரைகள் மாநில அமைப்புக்கு தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டது.



























திங்கள், 11 நவம்பர், 2013

கல்வி உரிமை நாள் விழா





ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 11.11.2013 ல் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் விழா கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
இன்று இப்பள்ளியின் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், தொடர்ந்து 11 ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்து இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றம் ஏற்பட வழி வகுத்தவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி அவரின் பிறந்த நாளை கல்வி உரிமை நாளாக கொண்டாட வேண்டி மத்திய , மாநில அரசுகள் அறிவித்திருப்பதையும்  அந்நாளை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் கல்வியின் சிறப்பையும், அவசியத்தையும் வலியுறுத்தும் பாடல்களையும், கவிதைகளையும் பாடினர்.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.








\