புதன், 13 நவம்பர், 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

                  இன்று கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 
            முற்பகல் துவக்க விழாவில் மாவட்டத் துவக்கக் கல்வி அலுவலர் திரு த.துரைசாமி அவர்களும், பிற்பகலில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(அ.க.இ) திரு பொன்.குமார் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இடைப்பட்ட காலத்தில் அரசு நடுநிலை/உயர்/மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் நான்கு அரங்குகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை தனித்தனி குழுக்களாகச் சமர்பித்தனர். 
               இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஏழு ஆய்வுக் கட்டுரைகள் மாநில அமைப்புக்கு தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டது.



























திங்கள், 11 நவம்பர், 2013

கல்வி உரிமை நாள் விழா





ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 11.11.2013 ல் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் விழா கல்வி உரிமை நாள் விழாவாக நடைபெற்றது.
இன்று இப்பள்ளியின் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், தொடர்ந்து 11 ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்து இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றம் ஏற்பட வழி வகுத்தவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி அவரின் பிறந்த நாளை கல்வி உரிமை நாளாக கொண்டாட வேண்டி மத்திய , மாநில அரசுகள் அறிவித்திருப்பதையும்  அந்நாளை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் கல்வியின் சிறப்பையும், அவசியத்தையும் வலியுறுத்தும் பாடல்களையும், கவிதைகளையும் பாடினர்.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.








\

சனி, 26 அக்டோபர், 2013

இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக் கூட்டம்




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
     இன்று இப்பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக் கூட்டம் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க  மாவட்ட அமைப்பாளர் திரு மு. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
     இறுதியில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர் திரு ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.








சனி, 12 அக்டோபர், 2013

பள்ளியில் விஜயதசமி விழா



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்களின் பயண்பாட்டுக்கான மடிக்கணிணிகள், உள்ளிட்ட கற்றல்/கற்பித்தல் பொருட்கள் தூய்மை செய்யப்பட்டது. பின்னர் மாணவர்களின் முழு மகிழ்வோடு விஜய தசமி எனும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கோ.மா. சீனிவாசன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு.சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்..