செவ்வாய், 10 டிசம்பர், 2013

சர்வதேச மனித உரிமைகள் தின விழா




இன்று 10.12.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினவிழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை சர்வதேச மனித உரிமைகள் தினவிழா எனும் இவ்விழாவின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதோடு, இன்று உலகில் சர்வதேச சமூகம் மனித உரிமைகளுக்காக, சாதாரன மனிதர்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் பல முயற்சிகள் மற்றும் நமது மத்திய மாநில அரசுகள் மனித உரிமைகள் அனைவருக்கும் சம அளவில் கிடைப்பதற்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் சர்வதேச மனித உரிமைகள் நாள் 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 நாள் ஐக்கிய நாடுகள் சபையால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதையும் எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி குழந்தைகள் மனித உரிமை தொடர்பான பேச்சு, கவிதை, பாடல்கள் ஆகியவற்றை வழங்கினர்.  
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.   








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக