வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சதுரங்கப் போட்டிகள்

                  எமது பள்ளியில் இன்று ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  1 -5 வகுப்புகள் மற்றும் 6 - 8 வகுப்புகள் என இரு பிரிவுகளில் சதுரங்கப் போட்டிகள் பள்ளி அளவில் நடைபெற்றது. முன்னதாக போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்கப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் போது அவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவமும், அதைத் தீர்ப்பதற்கான மன வலிமையும் மேம்படும் எனக் கூறியும் போட்டிகளின் விதிமுறைகளை விளக்கியும் துவக்கி வைத்தார்.
               இன்று பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் 1 - 5 வகுப்பு பிரிவில் மா. தமிழரசன், பூ. தனுஷ் (ஆண்கள் பிரிவு), ப. பூந்தளிர், சு. அர்ச்சனா (பெண்கள் பிரிவு) ஆகியோரும், 6 - 8 வகுப்பு பிரிவில் வே. உதயகுமார், ச. விக்னேஷ் (ஆண்கள் பிரிவு), வி. கிருத்திகா, ச. நந்தினி (பெண்கள் பிரிவு) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
                 போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு வே. வஜ்ஜரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக