வெள்ளி, 13 ஜனவரி, 2012

பள்ளியில் பொங்கல் விழா.

எமது பள்ளியில் ( ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம் ) இன்று பொங்கல் விழா மிகச்சிற‌ப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களின் பங்கேற்போடு துவங்கிய இவ்விழா ஆசிரியர்களின் மேற்பார்வையில் மிகச்சிற‌ப்பாக கிராமத்து திருவிழாவாகவும், இய‌ற்கையைப் போற்றும் விழாவான சூரியனை வழிபடும் விழாவாகவும் துவங்கியது. விழாவில் மாணவர்கள் மிகவும் மகிழ்வோடும், ஆர்வத்தோடும் பங்கேற்றனர். அப்போது செங்கரும்பு, மஞ்சள், பூசணி ஆகியவற்றையும், பல வண்ண பலூன்களையும்  மாணவர்களே கொண்டுவந்து பூசையில் வைத்தும் புதுப் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வில் பங்கேற்றும் மகிழ்ச்சி
அடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  உதவி ஆசிரியர்கள் ப.சரவணன், சு.சாரதா, ச.இலட்சுமி, பெ.கஸ்தூரி, க.வஜ்ரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.


                                     

                                      

                                      

                                     







2 கருத்துகள்: