வியாழன், 26 ஜனவரி, 2012

இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா


  ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று(26.01.2012) இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.
        பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, இந்தியத் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார்.
          பின்னர் பள்ளி மாணவர்கள் குடியரசு தினவிழா பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினர். சிலர் தேச பக்திப் பாடல்கள் பாடினர்.
          விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி சு.சாரதா, வஜ்ரவேல். இலட்சுமி ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.‌







2 கருத்துகள்: