ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வெள்ளி, 17 ஏப்ரல், 2026
கல்வியாண்டு இறுதிநாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா....
2025 - 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று, *2025 - 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா* நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா.யோகலட்சுமி, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் அனைத்து மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
நிகழ்வில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தமது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட உதவி ஆசிரியர்கள் அனைவரும் இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு நிறைவு செய்து செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் நல்ல அறிவுரைகளையும் கூறினர்.
நிகழ்வில் *எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கும், இப்பள்ளியில் 3 ஆண்டுகள் தற்காலிக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது விடுவித்துச் செல்லும் திருமதி மா. யோகலட்சுமி அவர்களை பாராட்டியும் நினைவுப் பரிசு* வழங்கப்பட்டது.
பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பில் இனிப்பு, அசைவ உணவு மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது....
வெள்ளி, 10 ஏப்ரல், 2026
நாற்பெரும்விழா....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (27.03.2026) *பள்ளி ஆண்டு விழா, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, 2026-27 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழா, கல்வி சீர் வழங்கும் விழா* உள்ளிட்ட *நாற்பெரும் விழா* நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஊத்தங்கரை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் க. சண்முகம், வட்டார கணக்காளர் திருப்பதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் க. புவனேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ. மகாலட்சுமி, திருப்பத்தூர் டி.எம். மணி, இரா. தம்பாகிருஷ்ணன், க. வாசு, நடன இயக்குநர் சந்திரன், பள்ளி உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் மணிகண்டன், அருள்தாஸ் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்களும், பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.
src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDNTn1DI3Ivpzb1LqiqyGWlSZg5JOegTDC5ie3t3MOkU74j1HiPsdEHzY1kwVhRUqS3_xdEkHnQTa128oxkiCf3XQhTF7Zqqi9ruyVagMrBfb8oqkUP96YN-hvJyWWb_EM3TW9N1FDOnfb4v1TAHdhVklLDcucyxYMQNYt0NyFcxNCrORGuJ_le_8HvVk/s400/1001716654.jpg"/>
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







































































































































































































































































































