




முன்னதாக பள்ளி மாணவர்களின் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீள பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் கைகள் சோப்பு போட்டுக் கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கிராமச் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வாசகங்களைமுழங்கினர்.
பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சர்வதேச கைகள் கழுவும் நாள் தொடர்பான செய்திகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சரியான கைகள் கழுவும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார்.
அதன் பின்னர் பள்ளி மாணவர்கள் சரியான கைகள் கழுவும் முறையை செய்முறை விளக்கம் மூலமாக மாணவர்களுக்கு செய்துக் காட்டினர்.