வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஆழ்ந்த இரங்கல்..........


           கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும், பள்ளிப்படிப்பு பாதியில் நின்று விடக்கூடாது எனக் கருதி
மாதம் 4,5 நாட்களாவது பள்ளிக்கு வரவழைத்து அவரின் கல்வி ஆர்வத்தை மங்கிட விட்டிடாமல் தொடர் முயற்சி மேற்கொண்ட
எங்களின் அத்தனை செயல்பாடுகளையும் அர்த்தமற்றதாக்கி விட்டு ...
நேற்று (26..02.2015) இவ்வுலகை விட்டோ பிரிந்து எங்கோ வேறிடத்திற்கு சென்று விட்ட
எமது பள்ளி 3ம் வகுப்பு மாணவி ச. பவாணியின்
ஆன்மா அமைதி பெறவும், அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பம் ஆறுதல் அடையவும்
எமது பள்ளியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை இதன் மூலம் பதிவு செய்வதைத் தவிர
வேறு எதையும் செய்ய இயலா கையறு நிலையில் நான்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக