புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திர தின விழா


எமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி ஏற்றி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல்கள் என பல வடிவங்களில் தமது திறன்களை வெளிப்படுத்தினர். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் தற்போதைய நிலை மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய நிலை வேறுபாடுகளை மிக விரிவாக எடுத்துக் கூறி விலை மதிப்பில்லா இச் சுதந்திரத்திரத்தை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். அடுத்து பிற ஆசிரியர்களின் கருத்துரைகளுக்குப் பின்  விளையாட்டு மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

     விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் ப.சரவணன், சு. சாரதா, மு. இலட்சுமி, வே. வஜ்ரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.





















2 கருத்துகள்:

  1. உங்கள் பள்ளி கல்விக்கோயில் என்பதில் எள்அளவும் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
  2. sirantha pani seyyum seguttuvanukku vaazhththukalum paaraattukalum.maa.ulaganathan thiruneelakudi

    பதிலளிநீக்கு