செவ்வாய், 16 நவம்பர், 2010

எமது பள்ளி முப்பெரும் விழா



               
                                              முப்பெரும் விழா
             எமது பள்ளியில் ”அறிவியல் கண்காட்சி துவக்க விழா, பள்ளி மாணவர் மலர் வெளியீட்டு விழா, குழந்தைகள் தின விழா” உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
    விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இரா. மனோகரி பள்ளி அறிவியல் கண்காட்சியத் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர் மலர் “மழலை முத்துக்கள்” இதழை ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் அ.யுவராஜ் வெளியிட ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே.எம்.சீனிவாசன், பெற்றொர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி.திருவேங்கடம், கட்டிடக் குழுத் தலைவர் கி.மோகன். கே.எம்.எத்திராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி ஆசிரியர் பி.பாண்டுரங்கன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் தாமரைச்செல்வி, லீலாகிருஷ்ணன், இராஜ சூரியன் ஆகியோர் செய்தனர்.

அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடல்.........


விழாவில் பள்ளித் தலைமையாசிரியரின் வரவேற்புரை..........
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரின் வாழ்த்துரை...............

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்குதல்.................

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்குதல்.................
பள்ளி மாணவர் மலர் “மழலை முத்துக்கள்” வெளியீடு..............



 மாணவர்களுக்கு பரிசளிப்பு....................

 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிறப்புரை.............

 விழாவில் கலந்துக் கொண்டோருக்கு நன்றியுரை........
 பள்ளியின் மூலிகைத் தோட்டத்தை பார்வையிடும் சிறப்பு அழைப்பாளர்கள்......

2 கருத்துகள்: