செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கல்விச் சுற்றுலா - 2018


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாகச் சென்று வந்தனர்.

     அவர்கள் வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்யாண மகாலில் செதுக்கப்பட்டுள்ள விஜயநகர கட்டிடக் கலை சார்ந்த சிற்பங்கள், கோட்டை அருங்காட்சியம், பொற்கோயில், பிரசித்திபெற்ற சேன்பாக்கம் செல்வவிநாயகர் கோயில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த  பள்ளிகொண்டா கோயில், சோழர்கால கட்டிட மற்றும் சிற்பக் கலையை வெளிப்படுத்தும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில் ஆகியவற்ரைப் பார்வையிட்டனர்.

     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, ந. திலகா ஆகியோரும் மாணவர்களும் சுற்றுலாவில் கலந்துக்கொண்டனர்.