வெள்ளி, 2 டிசம்பர், 2016

தேசிய மாசு கட்டுப்பாடு நாள் மற்றும் உலக கணினிக் கல்வி நாள் விழா.....









இன்று 02.12.2016 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தேசிய மாசு கட்டுப்பாடு நாள் மற்றும் உலக கணினிக் கல்வி நாள்  ஆகிய விழாக்கள்  கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி உதவி ஆசிரியர் திருமதி . நர்மதா அவர்கள் இயற்கை மாசுபாடுகள் குறித்து பல தகவல்களைக் கூறி அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும் தேசிய மாசு கட்டுப்பாடு நாள் மற்றும் உலக கணினிக் கல்வி நாள்  கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இன்றைய சுற்றுச் சூழலைக் காப்பது நமது அனைவரின் கடமை என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் சுற்றுச்சூழல் மாசு அடையாமல் இருப்பற்கான விழிப்புணர்வு பெறுவதோடு அதற்கான சரியான செயல் திட்டங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, 1984ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விபத்து பற்றியும், அதில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தது மற்றும் பல இலட்சம் பேர் பாதிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்டு, அதன் நினைவாகவே நமது நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் 2ல் தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள் கடைபிடிக்கபடுவதாகவும் கூறினார்.
தொரட்ந்து இன்றைய உலகில் அனைவருக்கும் அவசியமான கணினிக் கல்வி குறித்தும் அது தமது பள்ளியில் சிறப்பாக வழங்கப்பட்டு வருவது குறித்தும் விரிவாகப் பேசி அனைவரும் கணினிக் கல்வியில் சிறப்பு பெற்று உலகம் முழுமையும் வலம் வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மாசுகட்டுப்பாடு மற்றும் கணினிக் கல்வி குறித்து சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
                இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.























சனி, 15 அக்டோபர், 2016

இளைஞர் எழுச்சி நாள் விழா.......


 
ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.10.2016 ல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அப்துல் கலாம் தொடர்பான பல்வேறு செய்திகளையும், அவர் வாழ்வில் இடம் பெற்ற பல்வேறு சிரப்பு நிகழ்வுகளையும் பட்டியலிட்டுக் காட்டி, மாணவர்கள் அவரின் வாழ்க்கையை பின்பற்றியும், அவரின் கருத்துக்களை ஏற்றும் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாணவர்கள் ”கனவு நாயகன் அப்துல் கலாம்” என்ற தலைப்பில் கவிதை, பேச்சு, கட்டுரை ஆகியவற்றை  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கினர். தொடர்ந்து உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா ஆகியோரும் அப்துல் கலாம் குறித்து கருத்துரை வழங்கினர்.
 பின்னர் விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.