வியாழன், 16 ஜூன், 2016

தேர்வுநிலை ஆணை வழங்கும் விழா.......

               கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று 15.06.2016ல் தேர்வுநிலை ஆணைகள் வழங்கப்பட்டது.
         
            ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ் அவர்கள் தலைமையிலும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் முன்னதாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் திரு குழந்தைவேலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் கடந்த 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமணம் பெற்று 01.06.2006ல் முறைப்படுத்தப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் 59 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் தாம் ஏற்ற பணியில் பத்தாண்டு காலம் முடித்தமைக்கான தேர்வுநிலை ஆணைகள் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜெ. பாபு அவர்களால் வழங்கப்பட்டது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் இனி தமது ஊதியத்தில் 6% கூடுதலாகப் பெறுவர். ஆணைகளை வழங்கிப் பேசிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து ஆசிரியர்களும் தமது திறன்களை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 
           இறுதியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
          விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் கி. கோபால், பொருளாளர் திரு த. செல்வம், மகளிர் அணிச் செயலாளர் திருமதி க தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன், வட்டாரச் செயலாளர் திரு மு. மோகன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர் திரு சி.ந. பழனி, பொருளாளர் திரு எஸ். ராஜ்குமார், உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்



























திங்கள், 6 ஜூன், 2016

உலக சுற்றுச் சூழல் தினவிழா 2016



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.03.2016) ”உலக சுற்றுச் சூழல் தினவிழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் உலக சுற்றுச் சூழல் நாள் தொடர்பாக கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  எவ்வகையில் மனித குலத்திற்கு பயன் தருகிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.
விழாவில் உலக சுற்றுச்சூழல் நாள் தொடர்பான கவிதை, பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் நாள் நினைவாக மரக் கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடப்பட்டது.
பள்ளி உதவி ஆசிரியர் ந. திலகா வாழ்த்துரை வழங்கினர்.
இறிதியில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

















ஞாயிறு, 1 மே, 2016

2015 -16 கல்வியாண்டு நிறைவுநாள் விழா




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.04.2016) ”2015–16 கல்வியாண்டு நிறைவுநாள் விழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் கல்வியாண்டு நிறைவுநாள் தொடர்பான கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் கற்றல் என்பது ஓர் குறிப்பிட்ட காலம் மட்டும் நிகழக்கூடியது அல்ல எனவும், தனது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது எனவும் கூறி மனித குலத்திற்கு மிகவும் பயன் தரும் கல்வியை நாளும் நாம் தொடர வேண்டும் எனக்கூறி தெளிவாக விளக்கினார்.
பின்னர் மாணவர்கள் இப்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மூலம்.தாம் பெற்ற அனுபவங்கள் மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை உணர்ச்சிபூர்வமாக கூறினர்.
விழாவில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் எழுது பொருட்கள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, ந. திலகா த. லதா திரு வே, வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் எட்டாம் வகுப்பு மானவர் பூ. தமிழரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.