வியாழன், 28 ஜூன், 2018

முதல் பருவ விலையில்லா சீருடைகள் வழங்கும் விழா – 2018-19




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 28.06.2018 மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது .
                 பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா சீருடைகள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
                அப்போது அவர் இவ்வாண்டு தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணச் சீருடைகள் பற்றி எடுத்துக் கூறி 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு இளம்பச்சை நிற மேலாடைகள் மற்றும் கரும்பச்சை  நிற கீழாடைகள் வழங்கப்பட்டது. 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே வண்ண ஆடைகள் வழங்கப்பட்டது.  
           விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.லட்சுமி, . லதா, . திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்

















1 கருத்து:

  1. அற்புதமான சேவை ஐயா. தொடரட்டும் உமது தொண்டுகள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு