வெள்ளி, 1 ஜூன், 2018

முதல் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா – 2018-19


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 01.06.2018 மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது .
                 பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டது.
            அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் புதிய பாடநூல்களில் புதிய தொழிற் நுட்பம் மூலம் அறிமுகப் செய்யப்பட்டுள்ள .Q.R கோடுகளை பயன்படுத்தி, மாதிரி பாடத்தை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நடத்திக் காட்டினார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு புதிய பாடங்களை கவனித்தனர்.
     அப்போது அவர் இதே போன்று அனைத்து பாடங்களும் நடத்தப்படும் எனவும், மதிப்பீடும் இதே முறையில் அமையும்  எனவும் கூறி மாணவர்களை ஆர்வமூட்டினார்.
           விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.லட்சுமி, த. லதா, ந. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்
































2 கருத்துகள்: