புதன், 28 பிப்ரவரி, 2018

தேசிய அறிவியல் நாள் விழா - 2018


இன்று 28.02.2017 புதன்கிழமை எமது பள்ளியில் பள்ளி அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி அறிவியல்  உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி த.லதா தேசிய அறிவியல் நாள் குறித்து கருத்துரை வழங்கினர்.   
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும்  கொண்டாடப்பட்டு வரும் தேசிய அறிவியல் நாள் குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை மற்றும்  இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. இராமன் அவர்களின் வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அறிவியல் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு அறிவியல் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் நாளை நினைவு படுத்தும் விதத்தில்  எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டியதோடு அறிவியல் நாள் குறித்தும் சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..

                இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.