வியாழன், 9 நவம்பர், 2017

குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி


ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், இராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பிலான அறிவியல் கண்காட்சி ”தேசிய வளர்ச்சியில் புத்தாக்க புனைவுத் திட்டம் மற்றும் நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு” என்ற தலைப்பில் மாநிலம் முழுதும் நடைபெற்று வருகிறது அதன்படி கெங்கபிராம்பட்டி குறு வளமையம் சார்பில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, முன்னதாக காலை 10 மணிக்கு ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் இம்மையத்தைச் சார்ந்த 4 துவக்கப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள் ஒரு உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 9  பள்ளிகள் பங்கு பெற்றன. அதில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 65 இயங்கும் மாதிரிகளும், 50க்கும் மேற்பட்ட இயங்கா மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
அதில் அனைவரையும் கவர்ந்த மாதிரிகள் உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பிற்பகல் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  பரிசளிப்பு விழாவில் ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்டப் பொறியாளர் திரு ப. சரவணன் அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களைப் பாராட்டினார்.
விழாவில் துவக்கப் பள்ளிகள் சார்பில் மண்ணாண்டியூர், தாண்டியப்பணூர், அப்பிநாயகன்பட்டி, நாப்பிராம்பட்டி பள்ளிகளுக்கும், உயர் துவக்க நிலைப் பள்ளிகள் சார்பில் உப்பாரப்பட்டி, ஜோதிநகர், நாப்பிராம்பட்டி, கெங்கபிராம்பட்டி  பள்ளிகளுக்கும் முதல், இரண்டு மூன்று பரிசுகளும் ஒட்டுமொத்த படைப்புகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும், உதவி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் கெங்கபிராம்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி மா. அனுசுயா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.  , 
























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக