செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சர்வதேச தாய்மொழி நாள் விழா



இன்று 21.02.2017 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சர்வதேச தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா, திருமதி அ. நர்மதா ஆகியோர் தாய்மொழியின் அவசியம், சிறப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.   
பள்ளித் தலைமை ஆசிரியர் டிரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று உலகம் முழுமையும்  கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச தாய்மொழி நாள் குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் தாய்மொழி வழியில் கல்வி கற்பதோடு, தாய்மொழி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் தாய்மொழியின் அவசியம் மற்றும் தாய்மொழி வழிக் கல்வி கல்வி குறித்து சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
                இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.



















1 கருத்து: