செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தேசிய அறிவியல் நாள் விழா - 2017


இன்று 28.02.2017 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் பள்ளி அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி அறிவியல்  உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா, திருமதி அ. நர்மதா ஆகியோர் தேசிய அறிவியல் நாள் குறித்து கருத்துரை வழங்கினர்.   
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும்  கொண்டாடப்பட்டு வரும் தேசிய அறிவியல் நாள் குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை மற்றும்  இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. இராமன் அவர்களின் வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அறிவியல் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு அறிவியல் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் நாளை நினைவு படுத்தும் விதத்தில்  எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டியதோடு அறிவியல் நாள் குறித்தும் சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி பா. இந்துஸ்ரீ அனைவருக்கும் நன்றி கூறினார்.




















வியாழன், 23 பிப்ரவரி, 2017

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்




இன்று 23.02.2017 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி  மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  பள்ளியின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள், மாணவர் முன்னேற்றம், கல்வித் தர வளர்ச்சி ஆகியவைபற்றி விரிவாக விளக்கினார்.  பின்னர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெற்றோர்கள் பள்ளியின் எதிர்கால வளர்ச்சி குறித்து கருத்துரை வழங்கினர்.  
பின்னர் 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆங்கில உரையாடல், தமிழ்நாடு மாவட்டங்கள் நிலப்படத்தில் காட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை பெற்றோர்கள் முன்பாக நிகழ்த்திக்காட்டினர்.
கூட்டத்தில் தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் :
1.   அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளி எல்லைக்குட்பட்ட அனைத்து குக் கிராமங்களிலும் சரியான முறையில் பள்ளி வயது குழந்தைகள் கணக்கெடுப்பை நடத்திட ஆசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குதல்.
2.   அடுத்த ஆண்டு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டி அனைத்து பெற்றோர்களையும் நேரடியாகச் சந்தித்தல்.
3.   மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல புதிய கற்றல்/கற்பித்தல் முறைகளை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

                இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.




















புதன், 22 பிப்ரவரி, 2017

ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி முகாம்......

            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுகாதாரத் துறை மூலம் 1 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு  ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது.
          காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமதி பத்மபிரியா அவர்கள் தலைமையில் கிராம சுகாதார செவிலியர்கள் திருமதி கௌரி, திருமதி கலைச்செல்வி, ஊட்டச் சத்து பணியாளர்கள் திருமதி முருகம்மாள், திருமதி வரலட்சுமி ஆகியோர் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போட்டனர். முன்னதாக முகாமை ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.
           இம்முகாமில் ஜோதிநகர், மண்ணாண்டியூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 127 பேர் பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜோதிநகர் பள்ளி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி ந. திலகா, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்தனர்.