வியாழன், 12 ஜனவரி, 2017

பள்ளியில் பொங்கல் விழா - 2017




ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 12.01.20167 ல் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் பொங்கல் விழா தொடர்பான பல்வேறு செய்திகளையும், இவ்விழாவின் அவசியம் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டுக் காட்டி, உழவரின் தியாகம் பற்றியும் விரிவாகக் கூறி, மாணவர்கள் விவசாயம் தொடர்பான அனைத்து செய்திகளையும் அரிய வேண்டுமெனவும் விவசாயத்தைப் போற்ற கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா திருமதி அ. நர்மதா ஆகியோரும் பொங்கல் குறித்து கருத்துரை வழங்கினர்.
 பின்னர் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பொங்கல் வைக்கப்பட்டு இறை வழிபாட்டுக்குப் பின் விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் பொங்கல்  வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.




























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக