புதன், 10 ஆகஸ்ட், 2016

தேசிய குடற்புழு நீக்க நாள்.......




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று 10.08.2016 ல் கடைபிடிக்கப்பட்டது......

          பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

              பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க நாளின் அவசியம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றியும், வயிற்றில் காணும் குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் இந்தியா முழுதும் இன்று 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மேற்கொண்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.
                பின்னர் பள்ளியில் இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி ஆசிரியர் திரு .வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

            நிகழ்வில் கிராமக் கல்விக் குழு தலைவர் திரு தி. பூபதி, உதவி ஆசிரியர்கள் திருமதி நா.திலகா, . லதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக