வெள்ளி, 15 ஜூலை, 2016

கல்வி வளர்ச்சிநாள் விழா - 2016


இன்று 15.05.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சிநாள் விழா வாக  கொண்டாடப்பட்டது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று தமிழகம் முழுவதும் மக்களின் கொண்டாடப்படும் கல்வி வளர்ச்சிநாள் விழா பற்றி எடுத்துக் கூறியதோடு, காமராசரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் காமராசர் கல்வி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  கல்வி வளர்ச்சிநாள் தொடர்பாக,  காமராசரைப் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மற்றும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர்  கட்டுரை, கவிதை, பாடல், பேச்சு,  ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்து.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி . லதா, . திலகா, ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல்  நன்றி கூறினார்

 










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக