வியாழன், 7 ஏப்ரல், 2016

உலக சுகாதாரநாள் விழா - 2016


இன்று 07.04.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில் உலக சுகாதாரநாள் விழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று உலகம் முழுவதும் மக்களின் சுகாதார விழிப்புணர்வுக்காக உலக சுகாதாரநாள் விழா பற்றி எடுத்துக் கூறியதோடு நாம் நமது உடலை எவ்வாறு சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் எனவும், அதற்கு மேற்கொள்ள வேண்டிட நடவடிக்கைகள் பற்றியும், நாம் உண்ண வேண்டிய சத்துள்ள உணவின் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  உலக சுகாதார நாள் தொடர்பாக தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்து.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. ந. திலகா, த. லதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல்  நன்றி கூறினார்.  


















1 கருத்து: