புதன், 14 அக்டோபர், 2015

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா - 2015




      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் அவர்கள் தமது உரையில் நாம் அடுத்தவரிடம் பெறும் போது அடையும் மகிழ்ச்சியைவிட, அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைய வேண்டும். என அனைத்து மாணவர்களிடமும் கேட்டுகொண்டார். மேலும் அடுத்தவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை இளம் வயதிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டியே இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது எனக்கூறி அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
          அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாம் கொண்டுவந்த/தயாரித்துவந்த பரிசுப் பொருட்களை தமக்குப் பிடித்த மாணவ நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி தமது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி பார்ப்போர் அனைவரையும் கவர்வதாய் அமைந்தது.
            விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திருமதி நா. திலகா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
          இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும்  நன்றி கூறினார்.






























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக