வியாழன், 24 செப்டம்பர், 2015

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு........

             கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல் மூலம் வந்து பணியேற்றுள்ள மதிப்புமிகு பாபு அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை, மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு து. மனுநீதி, மாவட்டப் பொருளாளர் திரு நவீத்அக்பர் உள்ளிட்ட மாவட்டப் பொருப்பாளர்களும், அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் சந்தித்தனர். அப்போது  மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் அனைவரையும் மிகுந்த ஆர்வத்தோடும், அன்போடும் வரவேற்றமை அனைவருக்கும் மகிழ்வைத் தந்தது.
           சந்திப்பின் போது புதிய மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பில் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
     அப்போது மாவட்ட தொடக்கக் கல்வி வளர்ச்சியில் இயக்க பொருப்பாளர்களும், இயக்க ஆசிரியர்களும் தொடர்ந்து சிறப்பாக பங்காற்றுவார்கள் எனவும் இதற்கு சாட்சி இவ்வியக்கத்தில் உள்ளோர் அதிக அளவில் கல்வித்துறையின் மாநில, மாவட்ட விருதுகளைப் பெற்று இருப்பதே ஆகும் எனச் சுட்டிக்காட்டினார்கள். 
       தொடர்ந்து தாங்களும் எமது ஆசிரியர்களின் தேவைகள் மற்றும், எதிர்பார்ப்புகளை விரைந்து முடித்து தரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, அது தொடர்பாக தங்களோடு அடிக்கடி அலைபேசி வழியே அன்புத் தொல்லை கொடுப்போம் எனக் கூறிய போது, மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் தமக்கே உரிய பாணியில் பேசுங்கள், ஆனால் பள்லி நேரத்தில் வேண்டாம் எனக் கூறியமை, பள்ளியில் கற்றல்/கற்பித்தல் பணி எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு உள்ள அக்கறையை உணர முடிந்தது. அவரின் எதிர்பார்ப்பிற்கேற்ப கல்விப் பணி பாதிக்காத வகையிலேயே    தங்களோடு தொடர்பு கொள்வோம் என்ற உறுதி அளித்தனர்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக