வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பொது நூலகத்தில் எமது பள்ளி மாணவர்கள்.......

                      எமது பள்ளி மாணவர்கள் 40 பேர் ஊத்தங்கரை அரசு பொது நூலகத்தை பார்வையிட்டனர்.
              ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அரசு பொது நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுக்கும் தேவையான விலை உயர்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உட்பட 32,000 நூல்கள் உள்ளன.
            மேலும் இணைய இணைப்புடன் கூடிய 3 கணினிகள், அச்சுப் பொறியுடன் கூடிய நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியவை பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக உள்ளன. மேலும் இங்கு செய்தித் தாட்கள் பகுதி, சிறுவர் நூல்கள் பகுதி, ஆங்கில நூல்கள் பகுதி என பலபகுதிகள் உள்ளன. இந்த நூலகத்தை எமது மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தனர். 
                  பின்னர் இந்நூலகத்தின் நூலகர்  திரு க. கோபிநாதன் மற்றும் திரு சண்முகம்  ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.











4 கருத்துகள்:

  1. ஒரு முறை ஊத்தங்கரை வந்து உங்கள் பள்ளியை பார்க்க வேண்டும் போல் உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி, எமது பள்ளிக்கு வாருங்கள் வரவேற்கிறோம் நன்பரே.......

      நீக்கு