ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பள்ளித் தலைமை ஆசிரியருக்கு “முகநூல் வேந்தர்” விருது....




            அன்மையில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற காஞ்சி முத்தமிழ் சங்கத்தில் கலைமாமணி வி.ஜி. சந்தோசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவு சார்ந்த பகிர்வோடும் பயன்படுத்துவதை பாராட்டி ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு கவி. செங்குட்டுவன் @ செ. இராஜேந்திரன் அவர்களுக்கு கலைமாமணி, உலகப்புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களால் ”முகநூல் வேந்தர்” விருது வழங்கப்பட்டது.