திங்கள், 1 ஜூன், 2015

2015 – 16 கல்வி ஆண்டுக்கான முதல் பருவ பாடநூல்கள் வழங்கும் விழா



         ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 01.06.2015 பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட நூல்கள் மற்றும் இவ்வாண்டுக்கான முதல் கட்ட சீருடைகள் வழங்கங்கப்பட்டது.
     பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் சீருடைகளை ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இர. பிரசாத் அவர்கள் வழங்கினார்.
      கடந்த ஆண்டுக்கான விடுமுறை முடிந்து மீள இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட்டமை மாணவர்கள் மனதில் மகிழ்வை உண்டாக்கியது.
     விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி .இலதா, திரு வே வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக