வியாழன், 30 ஏப்ரல், 2015

2014 – 15 கல்வியாண்டு நிறைவு நாள் விழா....




இன்று (30.04.2015) எமது பள்ளியில் 2014 – 15 கல்வியாண்டு நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது.
     இக்கல்வி ஆண்டின் நிறைவு நாளான இன்று எமது பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு  மாணவர்களுக்கான வழியனுப்பு விழாவும், அனைத்து மாணவர்களுக்கான கோடை கொண்டாட்ட விழாவும், 2014-15 கல்வி ஆண்டு நிறைவு விழாவும் என முப்பெரும் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
       பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அதன் மூலம் தமது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதோடு, இப்பள்ளியில் கடந்த ஓராண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல புதிய செயல்பாடுகள் மற்றும் மாணவர் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை பட்டியலிட்டார். பின்னர் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சீ. கீர்த்திகா, ச. நந்தினி, சு. நதியா, சி. இராகுல், சே. நித்திஷ், த. அன்பரசன், பெ. இராகுல், அ. நவீன், ஆகியோரும் ஏழாம் வகுப்பு மாணவி பெ. பிரியாவும் தமது பள்ளியில் தாம் பெற்ற அனுபவங்களையும், ஆசிரியர்களின் அணுகுமுறைகள் பற்றியும் பேசினர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, வே. வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினர்.
        பின்னர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பிலான பரிசுகளும், மற்ற அனைத்து மாணவர்களுக்கு இனிப்புகள், பிஸ்கட்ஸ் மற்றும் குளிர்பாணங்கள் வழங்கப்பட்டது.
இறுதியில் ஏழாம் வகுப்பு மாணவர் மு. இராகுல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
       இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஆசிரியர்கள் எவரின் உதவியையும் நாடாமல் முழுக்க, முழுக்க மாணவர்களே செய்தனர் என்பதே இவ்விழாவின் மிகப்பெரும் சிறப்பு ஆகும்.






















































வியாழன், 2 ஏப்ரல், 2015

பள்ளி ஆண்டு விழா.............


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ : www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
பள்ளி ஆண்டு விழா
        ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 31.03.2015 பள்ளி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
          விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு த. பூபதி தலைமை தாங்கினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தற்போதைய 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் இவ்விழாவில் கலந்துக்கொள்ள இயலாமையால் அலைபேசி வழியே வாழ்த்து தெரிவித்த செய்தியை அனைவைரிடமும் பகிர்ந்துக்கொண்டார். அடுத்து இன்றைய விழாவில் இடம்பெறும் 32 நிகழ்வுகளில் 17 நிகழ்வுகள் மாணவர் திறன் வெளிப்படுத்தும், பாடம் தொடர்பான நிகழ்சிகள் ஆகும் எனவும், பிற 15 நிகழ்ச்சிகள் சிறியவர் முதல் பெரியவர் வரையில் அனைவரும் விரும்பி பார்வையிடத்தக்க ஆபாசம் கலக்காத திரைப்படப் பாடல்கள்  எனவும் சுட்டிக்காட்டினார்.
          பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். அதில் பள்ளியில் தற்போது நடைமுறையில் உள்ள மாணவர் நலன் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் பட்டியலிடப்பட்டது.
         கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திருமதி அமுதாசெல்வம், முன்னால் தலைவர் திரு மு.செல்வராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற எழுத்தர் திரு எஸ். செல்வராஜ் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
             ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு கா. நேரு, ஆசிரியப்பயிற்றுனர் திருமதி ஆ. ஆர்த்தி, உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு எஸ். இரவி, கனக்கம்பட்டி துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, கொட்டுகாரம்பட்டி உதவி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ச. லோகநாயகி ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்கினர்.
             ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இர. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் .திருமதி த. மகேஸ்வரி ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
              விழாவில் பள்ளியில் 1 முதல் 8 வகுப்பு வரையில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவர்களுக்கும், நடத்தை மற்றும் பிற சமூகச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 8 மாணவர்களுக்கும், பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்    2 மாணவர்களுக்கும், பள்ளி சுற்றுச் சூழல் மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 2 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
         முன்னதாக இப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பள்ளி புரவலர் திட்டத்தில் இணைந்துள்ள 11 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது. .
            பின்னர் மாணவர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பள்ளி மாணவர்கள் அனைவரும் (மொத்த மாணவர்களில் ஒருவர் கூட விடுபடாமல்) தமது தனித் திறமைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
         விழா நிகழ்வுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி அ. நர்மதா, த. இலதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
     விழாவில் உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
      விழாவில் இப்பள்ளியின் முன்னால் ஆசிரியர்கள் திரு. ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு தீ. சிவராமன், திரு இரா. முரளி, வழக்கறிஞர்கள் திரு இரா, செல்வகுமார், திரு ச. சசிகுமார் மற்றும் திரு இளங்கோ, திரு சுகுமார், திரு சதாசிவம் ஆகியோரும், பள்ளி கிராமம் மட்டுமல்லாது  பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெற்றோர்களும், பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்று நிகழ்வுகளை கண்டுகளித்தனர்.