வியாழன், 20 நவம்பர், 2014

வழியனுப்பு விழா........

                     எமது பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய திரு இரா. முரளி அவர்கள் பணியிட மாறுதல் மூலம் வேறு பள்ளிக்கு சென்றமைக்காக அவருக்கு வழியனுப்பு விழா எமது பள்ளியில் பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வின் மூலம் எமது பள்ளிக்கு வந்து மிகக் குறுகிய காலமே பணியாற்றினாலும் தமது கற்பித்தல் திறமையினாலும், நல்ல அனுகுமுறையாலும் அனைவரிடத்தும் நற்பெயர் பெற்றார்.
                            விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா, செல்வி த. இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


கணித உபகரணப் பெட்டியை பயன்படுத்தி கற்கும் எமது பள்ளி மாணவர்கள்.........










உலக கழிவறை நாளில் எமது பள்ளிக் கழிவறையின் அழகிய தோற்றம்...........





திங்கள், 17 நவம்பர், 2014

சாதிச் சான்று வழங்கும் விழா........

 

          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 17.11.2014 ல் மாணவர்களுக்கான சாதிச் சான்று வழங்கும் விழா நடைபெற்றது.
            தமிழக அரசின் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்து சான்றிதழ்களும் வட்டாட்சியர் அலுவலம் செல்லாமலேயே கணினி மையம் மூலம் பெறலாம். அதன்படி எமது பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ்களை எமது பள்ளியின் இணைய இணைப்பின் மூலம் பள்ளியிலேயே விண்ணப்பித்து  அவை ஏற்பு செய்யப்பட்ட பின்னர் பள்ளியிலேயே பதிவிரக்கமும் செய்து  அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் பெறாமல் வழங்கப்பட்டுள்ளது. வெறும் தாளில் அச்சிடப்பட்ட அச்சான்றிதழ்கள் அனைத்தும் அழகிய முறையில் லேமினேசன் செய்யப்பட்டு இன்று பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

         இச்சான்றிதழ்கள் வழங்கும் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமை தாங்கி அனைவருக்கும் சாதிச் சான்றிதழ்களை,வழங்கினார்.

       விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி த. இலதா, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தினவிழா.....



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.11.2014) பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களின்  125 வது பிறந்த தினம் குழந்தைகள் தின மாகக் கொண்டாடப்பட்டது.

              வழக்கமாக சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இன்று பல வண்ண ஆடைகளோடு பள்ளிக்கு வந்தனர். இதுவே அவர்களுக்கு இன்றைய முதல் மகிழ்ச்சியாக அமைந்தது.
அடுத்து 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு வித்தியாசமான பல போட்டிகள் நடத்தப்பட்டது.
அவை பின் வருமாறு:  
1.   முதல் வகுப்பு          - ஆங்கில வினைச் சொல்லுக்கேற்ற
                         செயல்பாடு செய்தல்.
2.   இரண்டாம் வகுப்பு - கூறும் எண்களுக்கேற்ப சேர்ந்து நிற்றல்.
3.   மூன்றாம் வகுப்பு  - வார்த்தையின் கடைசி எழுத்துக்கேற்ற அடுத்த
 வார்த்தைகள் இணைத்தல்
4.   நான்காம் வகுப்பு  - கவன வீச்சைக் கண்டறிதல்
5.   ஐந்தாம் வகுப்பு    - பொருட்களை வரிசைப்படுத்துதல்

பின்னர் 6முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் பால்கணேஷ் என இரு குழுக்கள் பங்கேற்ற சிறப்பு  வினா விடைப் போட்டியும், அடுத்து குழந்தைகள் வளர்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கு -  பயனுள்ளது, பயனில்லாதது என்ற தலைப்பில் தலைமை ஆசிரியரை நடுவராகக் கொண்ட, பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற சிறப்பு பட்டி மன்றம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் இருதரப்பிலும் வைத்த விவாதம் அனைவரையும் வியக்க வைத்தது சுமார் 80 நிமிடங்கள் இப்பட்டிமன்றம் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
         பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. விழாவில் பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, செல்வி. த. லதா, திரு. வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.