செவ்வாய், 7 அக்டோபர், 2014

விலையில்லா பாட நூல்கள் வழங்கல்




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.10.2014) பள்ளி மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டது.
2014 – 2015 ம் ஆண்டுக்கான இரண்டாம் பருவ விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் மு. இலட்சுமி, இரா. முரளி, வே. வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக