செவ்வாய், 15 ஜூலை, 2014

கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் விழா



கல்வி வளர்ச்சி நாள் விழா
இன்று  15..07.2014.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
                முன்னதாக பட்டதாரி உதவி ஆசிரியை திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  விழாவிற்கு தலைமை தாங்கினார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் இலக்கிய பேச்சு, மற்றும் கவிதை, பாடல்கள் மூலம் காமராசர் பெருமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி ஆசிரியர்கள் திரு தீ சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேலு, திருமதி அ. நர்மதா ஆகியோர் காமராசர் குறித்து பல தலைப்புகளில் பேசினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில்  காமராசரின் வாழ்க்கை ஓர் திறந்த புத்தகம் எனத் துவங்கி அவர் தமிழக கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அளவில்லா பணிகள் மற்றும் தமிழகத்தில் தொழில்துறை, விவசாயத்துறை உள்ளிட்டவை பெரும் வளர்ச்சி பெறுவதற்கு ஆற்றிய தொண்டு, அவரின் அரசியல் வாழ்க்கை, சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு என எல்லாச் சிறப்புகளையும் பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.
பின்னர் தமிழில் உரையாற்றிய ஏழாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ், ஆங்கிலத்தில் உரையாற்றிய ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன், கவிதை வாசித்த ஏழாம் வகுப்பு மாணவி கு. ஜீவா, பாடல்கள் பாடிய ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆ. கீர்த்தனா, வே. சர்மிளா, நான்காம் வகுப்பு மாணவிகள் ச. இனியா, சி. கோபிகா, திருக்குறளை பொருளுரையுடன் கூறிய நான்காம் வகுப்பு மாணவி ச. இனியா ஆகியோருக்கும் ஆங்கிலத்தில் 50க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், விலங்குகள், ஆகியவற்றின் பெயர்களைக் கூறிய முதல் வகுப்பு மாணவர்கள் மு. பேரரசு, க. பாலமுருகன், உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூறிய செ. திவ்யா, கு. காவ்யா, பாடல்கள் பாடிய ம. சுபா, பெ. கீர்த்திகா  ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பட்டதாரி உதவி ஆசிரியர் திரு. ச. முரளி அனைவருக்கும் நன்றி கூறினார்.




































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக