வெள்ளி, 11 அக்டோபர், 2013

சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா


இன்று 11.10.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திரு . சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா எனும் இவ்விழாவின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதோடு, இன்று உலகில் சர்வதேச சமூகம் பெண் கல்விக்காக, பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் பல முயற்சிகள் மற்றும் நமது மத்திய மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பின்னர் பள்ளி பெண் குழந்தைகள் பெண் கல்வி, பெண்கள் சுய முன்னேற்றம், பெண் உரிமை தொடர்பான பேச்சு, கவிதை, பாடல்கள் ஆகியவற்றை வழங்கினர்.  
இவ்விழா முழுமையும் இன்று பெண் குழந்தைகளைப் போற்றும் ஓர் விழாவாகவே சிறப்புடன் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.  

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக