செவ்வாய், 3 செப்டம்பர், 2013

சூரிய ஒளி மூலம் பெறும் மின்சாரம் – பயன்பாடு செயல்முறை விளக்கம்.



     எமது பள்ளியில் இன்று சூரிய ஒளி மூலம் எவ்வாறு மின்சாரம் பெறலாம் எனவும், அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
     3 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்யில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியும் அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களால் அளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் மாணவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில்  பார்வைக்கு வைக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட   செயல் முறை மாதிரியை   மாணவர்களுக்கு காட்டி நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     அப்போது மாணவர்களுக்கு தற்போதைய கூடுதல் மின்சார தேவை மற்றும் உற்பத்திக் குறைவு ஆகியன குறித்தும் மின்சார உற்பத்திக்கு ஆகும் கூடுதல் செலவுகள் குறித்தும் விரிவாகக் கூறி குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய ஏற்ற முறை சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரமே எனவும் இதுதான் எதிர் காலத்தில் அனைவருக்கும் பயன்படும் எனவும் விளக்கிக் கூறப்பட்டது.
இதன் மூலம் சூரிய ஒளிமூலம் எவ்வாறு மின்சாரத்தை தயாரிக்க முடியும் எனவும், அதை எவ்வாறு சேமித்து இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம் எனவும் மாணவர்கள் அறிந்தனர். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக