சனி, 31 ஆகஸ்ட், 2013

ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டி


 

இன்று 31.08.2013 ஊத்தங்கரை ஒன்றிய அளவில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான  சதுரங்கப் போட்டிகள் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 30 நடுநிலைப் பள்ளிகளும் 20 துவக்கப் பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்துக் கொண்டன.
      முன்னதாக போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருமதி வி. இராணி அவர்கள் துவக்கி வைத்தார். ஊத்தங்கரை வட்டத்தைச் சார்ந்த அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர்.
      இரு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 1 முதல் 5 வகுப்பு ஆண்கள் பிரிவில் மு.சதீஷ்குமார் ஊ.ரெட்டிப்பட்டி முதல் பரிசும், பூவரசன் முசிலிக்கொட்டாய் இரண்டாம் பரிசும், எஸ். சச்சின் சின்னகாரப்பட்டு  மூன்றாம் பரிசும்பெற்றனர். பெண்கள் பிரிவில் எம். சௌமியா முசிலிக்கொட்டாய் முதல் பரிசும், எஸ். மாலதி படப்பள்ளி இரண்டாம் பரிசும், டி. இலக்கியா நாப்பிராம்பட்டி மூன்றாம் பரிசும் பெற்றனர். அடுத்து நடைபெற்ற 6 முதல் 8 வகுப்புகளுக்கான போட்டிகளில் ஆண்கள் பிரிவில் உதயகுமார் ஜோதிநகர், கே. தினேச்க்குமார், பீமாராவ்ராம்ஜி கொண்டம்பட்டி, அபிமன்யு பெருமாள்நாயகன்பட்டி ஆகியோரும், பெண்கள் பிரிவில் கீர்த்தனா படபள்ளி, நிஷாந்தி முசிலிக்கொட்டாய், சௌமியா, சினேகா நாப்பிராம்பட்டி ஆகியோரும் தேர்வு செய்யப் பெற்றனர்.
      பின்னர் அரசு மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு பி. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.மா. சீனிவாசன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமதி அலங்காரமணி, ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு. மா. கிருஷ்ணமூர்த்தி, வெள்ளக்குட்டைத் தலைமை ஆசிரியர் திரு மு. உதயசங்கர் உள்ளிட்ட தலைமை ஆசிரியர்களும், உதவி ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக