வெள்ளி, 5 அக்டோபர், 2012

விலையில்லா பாடநூல்கள், சீருடை வழங்கும் விழா


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று கிராமக் கல்விக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளி மாணவர்கள் 89 பேருக்கு விலையில்லா இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
     முன்னதாக நடைபெற்ற கிராமக் கல்விக் குழுக் கூட்டத்திற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. டி. பூபதி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று, பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லாப் பொருட்கள் பற்றியும் அதன் தேவை மற்றும் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். எனவே மாணவர்களும் பெற்றோர்களும் இவற்றைப் பெற்று முறையாகப் பயன்படுத்திக்கொண்டு தம்மையும், தாம் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
     பின்னர் குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்குப் பின் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு. ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக