வெள்ளி, 19 அக்டோபர், 2012

சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா

எமது பள்ளியில் சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. அப்போது ஊர்வலத்தில் மாணவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒலித்துக்கொண்டு சென்றனர்.
பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு கைகள் மூலம் பரவும் நோய்கள் பற்றியும், சோப்பு போட்டு கைகள் கழுவ வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் கைகளில் உள்ள அழுக்கு மற்றும் பிற கிருமிகள் ஆகியவை அனைவருக்கும் தெரியும் வகையில் சோதனை செய்துக் காட்டி,  சரியாக கைகள் கழுவும் முறைகள் பற்றி விளக்கிக் கூறினார். அடுத்து பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் தத் தமது கைகளை சரியான முறையில் சோப்பு போட்டுக் கழுவிக் காண்பிக்க பிறகு மற்ற மாணவர்களும் சரியான முறையில் கைகளை கழுவி தினமும் இவ்வாறே கைகளை கழுவுவதாக உறுதி ஏற்றனர்.      
 











 




ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மனவளக் கலை யோகா பயிற்சிகள்

 
 
இன்றைய உலகம் அவசர உலகம் மட்டுமல்ல, ஆபத்தான உலகமும் கூட. ஆம், மனிதனை சோம்பேரி ஆக்கி, இளம் வயதிலேயே அனைத்து நோய்களையும்  வரவழைக்கும் வகையில் மனிதர்களை மாற்றிவிட்டது. அதற்கேற்ப தரமான உணவுப் பொருட்கள் தற்போது இல்லை. அன்றாடப் பணிகள் குறைந்துவிட்டது.

எனவே இளம் வயது குழந்தைகள் தம்மைக் காத்துக்கொள்ள அவற்களுக்கு உடற்பயிற்சியும், யோகாவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு எமது பள்ளியில் மன வளக் கலை யோகா பயிற்சி வகுப்புகள். நடத்தப்பட்டது. பயிற்சியை மனவளக்கலை துணை பேராசிரியர் திருமதி அனுசுயா அவர்கள் மூன்று நாட்கள் நடத்தினார். மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு இப் பயிற்சியில் பங்கு பெற்றனர். பயிற்சி வகுப்புகளில் எளிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் எளிய யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள்  தினமும் தமது வீட்டில் இப்பயிற்சியை மேற்கொள்வதாக உறுதி மேற்கொண்டனர்.























சனி, 13 அக்டோபர், 2012

திறன் வளர் போட்டிகள்

                   ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி மாணவர்களுக்கான திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டது.
                     பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்பு மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு  பங்கேற்றனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுநர் திருமதி இரா. ஆர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
                       இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திடு ப.சரவணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி  ஆசிரியர்கள் திருமதி  சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திரு வே. வஜ்ரவேல் ஆகியோர் செய்தனர்.