சனி, 10 மார்ச், 2012

அகில உலக மகளிர் தின விழா.

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் அகில உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பத்மா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கணகராணி மின்னிலை வகித்தார்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்வர்கள் தனது வரவேற்புரையில் அகில உலக மகளிர் தின வாழ்த்துக்க்ளை அனைவருக்கும் கூறிவிட்டு மகளிர் தினத்தின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாற்றுச் செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் மகளிர் தினம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினர், அடுத்து சாதணைப் பெண்மணிகள் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், அன்னை தெரெசா, அன்னிபெசண்ட் அம்மையார், இந்திரா காந்தி, மருத்துவர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எடுதுரைத்து அவர்களின் சாதனைகளையும் அதற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்திரைத்தனர். பின்னர் கீழ் வகுப்பு மாணவர்கள் பெண்கல்வி குறித்த பாரதிதாசனின் பாடல்களை சிறப்பாக பாடிக் காட்டினர். இவ்விழாவில் பங்கு பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பெற்றோர்களும் மிக்க மகிழ்வோடு காணப்பட்டனர். 
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர்    திரு ப.சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திருமதி வே. கஸ்தூரி. திரு. வஜ்ரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.










1 கருத்து: