புதன், 29 பிப்ரவரி, 2012

தேசிய அறிவியல் நாள் விழா.......

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2012) அறிவியல் அறிஞர் சர் சி.வி.இராமன் அவர்களின் பிறந்த நாள் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் இரவில் மட்டுமே எரிந்து பகலில் தானாகவே அணைந்துவிடும் மின் விளக்குகள், வயலில் நீர் பாய்ந்த உடன் தானே இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மின் மோட்டார், மாணவர்களால் அமைக்கப்பட்ட செயற்கை மலை மற்றும் காடுகள், நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியைப் பயன்படுத்தி செயல்பட்ட இராக்கெட் ஆகியன அனைவரையும் கவர்ந்தது.  
இது தவிர மாணவர்களால் 20 க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் செய்து காட்டப்பட்டது.    கண்காட்சியை ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் தி. இலம்போதரன். க. சண்முகம் ஆகியோரும் பெற்றோர்களும், மாணவர்களும் கண்டுகளித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் ப. சரவணன், சு. சாரதா, மு. இலட்சுமி, பெ. கஸ்தூரி, வெ. வஜ்ரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக