செவ்வாய், 15 நவம்பர், 2011

குழந்தைகள் தினவிழா........

எமது பள்ளியில் இன்று 14.11.2011 ல் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் விழா குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது.
               விழாவிற்கு மூன்றம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம், துணைத் தலைவர் திரி கே.எம்.எத்திராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு ஜெயராமன், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலர் திரு சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பாரத் ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்தரன் அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் . விழாவில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டது.
                இறுதியில் பள்ளி உதவி ஆசிரியை திருமதி சி. தாமரைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக