ஞாயிறு, 26 ஜூன், 2011

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

எமது பள்ளியில் 24.06.2011 - ல் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் தமது உரையில் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் குறித்தும் இவ்வாண்டுக்கான புதிய செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் பேசிய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜன் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சி நிலை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறி பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர் பள்ளி பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின் உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் அனைவருக்கும் நன்றி கூறினார்.