வியாழன், 27 ஜனவரி, 2011

பள்ளியில் குடியரசு தின விழா.



                இந்திய திருநாட்டின் 62 - வது குடியரசு தின விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






















நூலகப் போட்டிகள்

எமது ஊராட்சியின் சார்பில் நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் வகையில் வரைபடத்தில் இடங்களைக் கண்டறிதல் போட்டி, நினைவாற்றல் சோதிக்கும் போட்டி, கவிதைப் போட்டி, வரைபடப்போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் வரபடத்தில் இடங்களை கண்டறிதல், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் முதலிடமும் மற்ற இரு போட்டிகளிலும் இரண்டாமிடமும் பெற்று சாதணை படைத்தனர்.











அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

                   கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் , மூன்றம்பட்டி ஊராட்சியின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கு பெற்று அதிக அளவிலான பரிசுகளைப் பெற்றனர்.














வெள்ளி, 14 ஜனவரி, 2011

பள்ளியில் பொங்கல் விழா.

               இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். பொங்கல் பாணை பொங்கி வழிந்ததைக் கண்ட மாணவர்கள் “பொங்கலோ பொங்கல்” என மிகுந்த உற்சாகத்தோடு கூக்குரலிட்டது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கிராமத்து பொங்கல் எவ்வாரு நடைபெறுமோ அதே உற்சாகத்தோடு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மாணவர்களுக்கு உரியடித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது. இதைக் கண்ணுற்ற கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைகர் ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் தலைமையில் உதவி ஆசிரியர்கள் திரு பி. பாண்டுரங்கன், திருமதி சி. தாமரைச்செல்வி, திரு சே.லீலாகிருஷ்ணன், திரு ந.இராஜசூரியன் ஆகியோர் செய்தனர்.