புதன், 28 அக்டோபர், 2009

காண்போம் கற்போம்


காண்போம் கற்போம் நிகழ்சியைக் காணும் பள்ளி மாணவர்கள்.......

சுகாதார விழிப்புணர்வுப் போட்டி.
ஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சுகாதாரப் போட்டிகள் நடைபெற்றது. சுகம் தரும் சுத்தம் என்ற தலைப்பில் பேச்சு,கட்டுரை,ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. ஒன்றியஅளவில் 21 பள்ளிகள் பங்கு பெற்ற இப்போட்டிகளில் கொட்டுகாரம்பட்டிநடுநிலைப் பள்ளி மாணவி சு.பிரியா கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், மு.தங்கவேல் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்று ஒன்றிய அளவில் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் மற்றும் உதவி ஆசிரியர்கள் சி.சிவா, சே.லீலாகிருஷ்ணன், சி.தாமரைச் செல்வி ஆகியோரும் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் பாராட்டினர்

1 கருத்து:

  1. தங்களின் பள்ளிப் பணிகள் மேன்மேலும் வளர்ச்சி பெற எனது இனிய வாழ்த்துக்கள்.

    கி.சங்கர்
    சேலம்.

    பதிலளிநீக்கு