வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009























































படிப்பும் இனிப்பும் பற்றி ஆய்வு செய்ய வந்த புது தில்லி குழுவினர்.










04.08.2009 அன்று புது தில்லி ஆய்வுக் குழுவினர் திரு குரியன் அவர்கள் தலைமையில் வந்து பள்ளியின் கற்றல் கற்ற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தனித்தனியே கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்தனர். பின்னர் தமது இறுதி பார்வை அறிக்கையில் பள்ளியின் நடைமுறைகள் பற்றி வெகுவாகப் பாராட்டி பதுவு செய்தனர்.
























































செயல் வழிக் கல்விக்கான மாநிலத் திட்ட ஆலோசகரின் பள்ளிப் பார்வை.










29.07.2009 - அன்று செயல் வழிக் கல்விக்கான மாநிலத் திட்ட ஆலோசகர் திரு அ. பிச்சையா அவர்கள் பள்ளியைப் பார்வையிட்டு செயல்வழிக் கல்வியின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் செயல் வழிக் கற்றல் மற்றும் படைபாற்றல் கல்வி ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளாக அவர் தனது திருப்தியை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்து வெளிப்படுத்தினார். அவருடன் வந்த மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு எஸ். இராஜேந்திரன் அவர்களும் பாராட்டு தெரிவித்தார்.











































































சுகாதார வாரம்













கடந்த 21.07.2009 _ 27.07.2009 வரையில் பள்ளியில் சுகாதார வாரம் கொண்டாடப்பட்டது. அதன் சிறப்பு நிகழ்வாக 24.07.2009 - ல் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மாணவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் பொது மக்களுக்கான சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது.